சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த பெருந்துறை முன்னாள் எம்.எல்.ஏ. S.ஜெயக்குமார் உள்ளிட்ட நான்கு பேரும் இன்று சபாநாயகரை நேரில் சந்தித்தனர். ராஜினாமா செய்வதற்கான காரணங்களை விளக்கி எழுத்துப்பூர்வமான கடிதத்தை வழங்குமாறு சபாநாயகர் ஏற்கனவே கேட்டிருந்த நிலையில், அதற்கான விளக்கக் கடிதத்தை அவர்கள் இன்று நேரில் அளித்தனர். இந்த சந்திப்பின் போது, தங்களது ராஜினாமா முடிவுக்கான காரணங்களையும் நான்கு பேரும் சபாநாயகரிடம் விளக்கமாக எடுத்துரைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.