கோவை புதூர் பார்க் டவுன் பகுதியைச் சேர்ந்த 19 வயது மாணவி அனுகீர்த்தனா, மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் நீட் தேர்வுக்காக தீவிரமாக தயாராகி வந்த நிலையில், தேர்வு தொடர்பான சர்ச்சைகள் மற்றும் மீண்டும் தேர்வு நடத்தப்படலாம் என்ற தகவல்களால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், உறவினர்களுக்கு உருக்கமான வாட்ஸ்-அப் செய்தி அனுப்பிய அவர் தற்கொலை செய்து கொண்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் குறித்து குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.