காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின் போது வீரத்துடன் போராடி சக வீரர்களின் உயிரைக் காப்பாற்றியதற்காக நாட்டின் உயரிய வீர விருதான ‘கீர்த்தி சக்கரா’ விருது பெற்ற ராணுவ வீரர் லென்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரத்திற்கு, தேனி மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள தர்மாபுரி கிராம மக்கள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தேவராட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் அவருக்கு மாலை அணிவித்து வரவேற்ற பொதுமக்கள், அவரது வீர தீர செயலுக்கு பாராட்டு தெரிவித்தனர். முன்னாள் படைவீரர் நலச் சங்கத்தினரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

